Thursday 17 December 2009

வேட்டைக்காரனை விரட்டுவோம் -----இரண்டு






















வேட்டைக்காரனை விரட்ட வேண்டும் .இதனால் தயாரிப்பாளர் பாதிக்க படுவாரே என்று யோசிக்க வேண்டாம்.அவர் சன் குழுமத்திற்கு படத்தை விற்று விட்டார்.சன் குழுமம் பெரும் பண முதலைகள். மக்கள் கண்ணீரை கூட விற்பனையாக்கி தொடர்கள் போட்டு காசு பாப்பவர்கள். ஒரு தடவை தோற்றால் தப்பு இல்லை.

தோற்கடிக்க வழிகள் ...........
நான் நேற்று நூறு பேருக்காவது குறுந்தகவல் அனுப்பி இருப்பேன் ......மானம் உள்ள தமிழன் என்ற வார்த்தையை சேருங்கள் படம் பார்ப்பவனுக்கு நெஞ்சு உறுத்த வேண்டும் .........நீங்கள் அதையே செய்தால் நல்லது ..............
காசு போட்டு முடிந்தால் அனைவரிடம் போன் செய்து பேசுவேன் .....அப்படியும் படம் பார்த்தால் எனக்கு யாராக இருந்தாலும் அவர் நட்பு வேண்டாம் ....................
விஜய் மேல் ஏன் இந்த கொலை வெறி என்று
கேட்கலாம் ................................ஈழம் பற்றி பேச வேண்டும் என்று
சொல்லவில்லை.....பேசி விட்டு ராகுலை பார்த்தது தவறு .....படத்திலே வசனம் பேசுவது உணர்வுகளை காசாக்குவது நியாயமா விஜய். அப்படி பேசி முடித்து ஒழுங்காய் நடந்தாயா...உண்ணா விரதம் பிரியாணி வந்தது என்று கேள்விப்பட்டேன். அது உன் பட விழாபோல் உனக்கு போஸ்டர் மற்றும் உன் பாடல்கள் ..........எதற்காக செய்கிறோம் என்று உணர்வு இல்லை உன்னிடம் ......நீ நயன்தாராவை கட்டி பிடிக்க முடியும் ஆட்சியை கட்டி பிடிக்க முடியாது...........கண்ணீரை கல்லா ஆக்காதே. படம் ஓட வேண்டும் என்றால் வேறு யாராவது மழையில் நனைய விடு .....ஈழம் கண்ணீர் பற்றி பேசி ஏமாற்றாதே ........!

பின்குறிப்பு
என் நண்பர்கள் அந்த பதிவை படித்து விட்டும் பார்க்க கிளம்பினார்கள் .....
நண்பர்களே உங்களை போராடுங்கள் என்று சொல்ல வில்லை பிரபாகரன் மாதிரி
உயிரை விட சொல்ல வில்லை ஒரு படம் உங்காளால் பார்க்காமல் இருக்க முடியுமா ........எந்த நண்பனாவது இதை படித்து விட்டு பார்க்க சென்றால் ........நான் பேச மாட்டேன் "எச்சரிக்கை அல்ல கட்டளை"

15 comments:

நா.பூ.பெரியார்முத்து said...

நர்மதா அவர்களுக்கு
பக்கத்து வீட்டு இழவுக்கு அழவேண்டாம் சிரிக்காமல்லாது இருங்கள்

புலவன் புலிகேசி said...

//நான் குறுகி பார்க்க வில்லை .சினிமா என்பது பொழுது போக்கு மட்டும் அல்ல .......
இது குறுகிய பார்வை ,....
உனக்கு உன் தம்பி அரசியல் எழுத கூடாது ....பாசம் கண்ணை மறைகிறது உனக்கு ....
அதானால் இது குறுகலான பார்வை ஆகாது //

உங்கள் பார்வை விரிவடைந்து விட்டதா கார்த்திக். அப்படி விரிவடைந்திருந்தால் ஈழம் மட்டும் பிரச்சினையாக தெரிந்திருக்காது. ஈரான், பாலஸ்தீனம், பாகிஸ்தான் பற்றி கூட சிந்தித்திருப்பீர்கள். நீயும் நானும் தமிழன் என்பதால் ஈழம் பற்றி பேசுகிறோம். பாகிஸ்தான், பாலஸ்தீனத்தில் பாதிக்கப் படுபவர்கள் தமிழன் இல்லை. அதனால் அது பற்றி நமக்கு கவலை இல்லை. நாமெல்லாம் குழு பிரிக்கப் பட்டு விட்டோம். இது தான் எதார்த்த வாழ்க்கை. இதற்கு பெயர் விரிந்த பார்வை அல்ல. உண்மையில் சொன்னால் எவனும் விரிந்த பார்வை கொண்டவனல்ல. அப்படி இருக்க முடியாது. இதுதான் நீங்கள் ஒப்பு கொள்ள மறுத்தாலும் எதார்த்தம்.

Narmada said...

so u blocked all the comments to me.... good

க.பாலாசி said...

உங்களின் எண்ணம் உணர்கிறேன் நண்பா....

புலவன் புலிகேசி said...

ம் ம்ம்ம்

புலவன் புலிகேசி said...

fச்ட்fச்ட்f

amallantamilan said...

அண்ணா அருமையாயான வரிகள்

amallantamilan said...

அண்ணா அருமையான வரிகள்

amallantamilan said...

அண்ணா அருமையான வரிகள்

Prathap Kumar S. said...

ஒண்ணும் பிரச்சனை இல்லங்க அந்தப்படம் அல்ரெடி பிளாப்தான்...

குறை ஒன்றும் இல்லை !!! said...

* இந்திய அணி இலங்கையில் போர் நடந்த போதும் கிரிக்கெட் விளையாடியது ஆகவே இந்திய அணியை புறக்கணிப்போம்..

* கிரிக்கெட் விளையாட்டையே புறக்கணிப்போம்.

* கிரிக்கெட் பார்ப்பவர்களை பார்த்தவர்களை புறக்கணிப்போம்

* கிரிக்கெட் வீரர்களுக்கு ஸ்பான்ஸர் செய்யும் அனைத்து பொருட்களையும் புறக்கணிப்போம்.

* தமிழக தலைவர்கள் எதையும் செய்யவில்லை ஆகவே அனைவரையும் புறக்கணிப்போம்.

* புலிகளுக்கு எதிர்ப்பாகவும் எழுதுவதால் பதிவையே புறக்கணிப்போம்

* அப்பதிவை எழுத உதவும் கணிப்பொறிகளை புறக்கணிப்போம்..

இப்படியே புறக்கணிச்சிட்டு போனா அப்புரம் எதுவுமே மிஞ்ஞாது...

ஹீம்ம்ம் இன்னும் எவ்வளவு நாளுக்கு தான் இப்படி வெறுமனே எழுதீட்டு இருக்க போறீங்களோ!!!

குறை ஒன்றும் இல்லை !!! said...

வேட்டைக்காரன் இலங்கையில் கூட வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறதாம்.. ஆகவே இனி யாரை புறக்கணிப்பதாக அர்த்தம்..

அட போய் புள்ள குட்டிகளை படிக்க வைங்க!!!!

வெண்ணிற இரவுகள்....! said...

விஜய் ரசிகர் அவர்களே .....கிரிக்கெட் பார்ப்பவரே என்ன சொல்ல ...
உங்களை போன்றவர்கள் இருக்கும் போது வெற்றி பெரும் ....
நீங்கள் சொல்வது எதையும் சுட்டிக்காட்டாமல் இருந்து காதல் கவிதை மட்டும் எழுத வேண்டுமா ..........????
சுட்டிக்காட்ட தான் பதிவு ......................நான் என்ன செய்தேன் என்பதை பதிவில் எழுதி கொண்டிருக்க முடியாது .....................................................

ஏன் உங்களுக்கு கேள்வி கேட்டால் கோபம் வருகிறது .....இது முதலாளித்துவ சிந்தனை ....
நான் அப்படி தான் கேட்பேன் நண்பரே .......

ரெண்டாவது ' வேட்டைக்காரன்' வெற்றி பெற்றது என்று சொன்ன ஒரே ஆள் நீங்கள் தான் ....

குறை ஒன்றும் இல்லை !!! said...

//விஜய் ரசிகர் அவர்களே .//

ஹா ஹா ஹா. என் பதிவ நீங்க பாக்கல....


//ஏன் உங்களுக்கு கேள்வி கேட்டால் கோபம் வருகிறது .....இது முதலாளித்துவ சிந்தனை ....
நான் அப்படி தான் கேட்பேன் நண்பரே .......//

மன்னிக்க நீங்கள் கேள்வி கேட்கவில்லை கிட்டத்தட்ட கட்டளை இட்டு இருக்கின்றீர்கள்..

கேள்வி கேட்டது நான் தான்

//வேட்டைக்காரன்' வெற்றி பெற்றது என்று சொன்ன ஒரே ஆள் நீங்கள் தான்//

இலங்கையில் வேட்டைக்காரனை என்ன ராஜபக்சேவா பாத்துக்கொண்டு இருப்பார்? உங்கள் மொழியில் சொல்வதெனில் இழவு வீட்டிலேயே படம் ஓடிக்கொண்டு இருக்கிறது.. அதை தமிழன் தான் பார்த்துக்கொண்டு இருக்கிறான்.. நமக்காவது இலங்கை துயரம் ஊடக வாயிலாக தான் தெரியும் ஆனால் உங்கள் இலங்கை வாழ் தமிழர்களுக்கு கண்ணெதிரே நடக்கும் கொடுமை..

இன்னும் எத்துனை நாட்களுக்கு தான் இந்த் ஈழ ஆதரவு நாடகமோ!!!

Paarvai said...

// இன்னும் எத்துனை நாட்களுக்கு தான் இந்த் ஈழ ஆதரவு நாடகமோ!!!//

We are not making any drama with Our struggle. First of all understand our struggle. Not like you guys bend over to Hindi(Sorry for my language).
Most Eelam people had boycott the movie. We have proved them not to use our struggle for their political agenda. One day every one will pay for our people lives.