Thursday 3 December 2009

குளிக்க முடியாத நீர் வீழ்ச்சி


விரலோரம்
நீர் வீழ்ச்சியாய் கவிதைகள் .....!
நடமாடும் நீர்வீழ்ச்சியாக
நீ மழையில்.....!

உன்னைப் பார்த்த மேகங்கள்
பொத்துக்கொண்டு வந்தது மழையாக
தன் காதலை சொல்ல...!

உன் மேல் விழுந்த நீர்
துளிகள் தரை இறங்குவது இல்லை...
நீ தட்டி விடும் வரை .......!
கோபப்பட்ட வெய்யில் நீரை
நிர்மூலம் ஆக்கியது ...!

நீர்வீழ்ச்சி பார்த்த நான் வீழ்ச்சி ....!

16 comments:

பூங்குன்றன்.வே said...

வாவ்..வாவ்..அசத்தல் வரிகள்.கவிதை மழை.
ரொம்ப நல்லா இருக்கு கார்த்திக்.

vasu balaji said...

காலையில் கார்த்திக்கின் காதல் மழை. அருமை.

ஈரோடு கதிர் said...

//நீர்வீழ்ச்சி பார்த்த நான் வீழ்ச்சி //

ஹ ஹ.... இது சூப்பர்

அகல்விளக்கு said...

கவிதை மழை கலக்குகிறது.

தேவன் said...

/// பொத்துக்கொண்டு வந்தது மழையாக ///

ஹா... ஹா ... ஹா ... சூப்பரு ...

செல்ல நாய்க்குட்டி மனசு said...

கவிதை அருமை

ப்ரியமுடன் வசந்த் said...

//உன் மேல் விழுந்த நீர்
துளிகள் தரை இறங்குவது இல்லை...
நீ தட்டி விடும் வரை .......!//

இது சூப்பர் வரிகள் ரசிக்க முடியுது...
:)))

தமிழ் said...

அருமை

Menaga Sathia said...

சூப்பர்ர்...

கலகலப்ரியா said...

கவித மழை..!

ஸ்ரீராம். said...

கடைசி வரிகள்...மனித பலவீனம்!

கமலேஷ் said...

ரகளையான கவிதை...
அழகா எழுதி இருக்கீங்க...

கா.பழனியப்பன் said...

நீர்வீழ்ச்சியில் நனைந்த சுகம் நீர்வீழ்ச்சியில் நனையாமலேயே.

நன்றி

இன்றைய கவிதை said...

//உன்னைப் பார்த்த மேகங்கள்
பொத்துக்கொண்டு வந்தது மழையாக
தன் காதலை சொல்ல...!//

கவிதை வரிகள் அருமை!

-கேயார்

ரிஷபன் said...

எங்களைக் குளிப்பாட்டிட்டீங்க.. கவிதையால.. நைஸ்

மாதேவி said...

"உன்னைப் பார்த்த மேகங்கள்
பொத்துக்கொண்டு வந்தது மழையாக"

மனதிற்கு இனிய கவிதைமழை.