Sunday 23 May 2010

என்னோடு வா வீடு வரைக்கும்















"இன்னிலேர்ந்து அவல மறந்திடணும்" என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டேன்
பஸ்ஸில் போய்க்கொண்டிருக்கும் பொழுது அவள் பெயரை சொல்லி யாரோ கூப்பிட சட்டென
திரும்பினேன் . யாரோ ஒரு பெரியவர் குழந்தையை வைத்துக்கொண்டிருண்டார் .
அந்த குழந்தைக்கு இவன் காதலியின் பெயர் ....அதை முறைத்து பார்த்தேன் .....அது என்னை பார்த்து ஏளனமாய்
சிரித்தது . கீழே இறங்கினேன் யாரோ ஒரு பெண் அவள் சாயலிலேயே இருந்தால் ......மறுபடியும் அவள் நியாபகம்
வந்தது. வானம் கருத்துக்கொண்டு மேகம் முட்டிக்கொண்டு வந்தது . அவன் காதலித்த நாட்களில் மழை ஒரு குறியீடாய்
இருந்தது . அந்த மழையிலும் நீச்சல் அடித்துக்கொண்டு அந்த தெருவுக்குள் நடந்து கொண்டே இருப்பேன் .................................
அதனால் மழை இவன் காதலை மேலே இருந்து பார்த்துக்கொண்டிருப்பதாய் நினைப்பேன் ...................................
மழையை விட வெயில் குறியீடாய் இருந்திருந்தால் காதல் நிலைத்து இருக்குமே என்று நினைப்பேன் .....................

சரி என்று டீ கடை முன்பு உட்கார்தேன் ..................டீ கடை முன்பு "குஷி" படம் ஓடிக்கொண்டிருந்து ........ ஆரம்ப கட்ட காட்சிகள்
இவன் காதலித்து 2005 அந்த வருடமே பிரிந்தது கசந்தது . ஆனால் இது 2010 இன்னுமா காதல் தொடர்கிறது இன்னும் அவள் அலைகள்
அடித்துக்கொண்டே இவனை சல்லடை ஆக்குகின்றன. அவள் வெளிநாட்டில் படிக்க போய்விட்டாள் , ரொம்ப நாள் மறந்த காதலை வாரணம் ஆயிரம்
படம் நியாபக படுத்தியது அதில் இருக்கும் கிருஷ்ணன் சொல்வாரே " அமெரிக்க என்ன டா இங்க தான் இருக்கு " என்பாரே அந்த விடயம் இவனுக்குள்
எதோ பண்ணியது .............அமெரிக்க போகலாமா என்று யோசித்தான் ......... அப்புறம் விட்டு விட்டான் . மறுபடியும் மழை பெய்கிறது , யாரோ ஒருவர்
"குஷி" படம் பார்க்கிறார் , யாரோ ஒரு குழந்தைக்கு அவளின் பெயர் , அதுவும் கூப்பிடும் பொழுது என் காதில் விழ வேண்டுமா , யாரோ ஒரு பெண்அவளை
போலவே இருக்கிறாள் , யாரோ ஒரு பெண் அவள் அணிந்த ஆடைகளை உடுத்திகிறாள் நான் அவள் ஆடையை பார்க்க நான் தப்பானவனோ என்று நினைத்து
முறைத்துப்பர்க்கிறாள் .

சரி இப்படி எல்லாம் நடந்துக்கொண்டே இருந்தது . எப்படி வெளியே வர என்று தெருவிற்குள் நுழைத்தேன் . என் காதலி எதோ ஒரு வேனில் இறங்கினாள்.
பச்சை நிற புடவை அணிந்து இருந்தாள் . இருவர்க்கும் அதிர்ச்சி ????இதற்க்கு முன்னால் நடந்த சம்பவங்கள் எல்லாம் அவள் வருகிறாள் ஊரில் இருந்து
வந்திருக்கிறாள் என்பதை குறியீடாய் சொன்னதா ????நான் நினைப்பது போல் அவளும் நினைத்து இருப்பாளா??? வெயில் சுளீரென்று அறைந்தது ..................
நிஜம் வெயில் , மழை எல்லாம் எதோ ஒரு காலம் தான் வரும் என்றது , வெயிலுடன் பேருந்தில் அலுவல் போக ஏறினேன்

3 comments:

ஜெய் said...

சூப்பர்.. அனுபவிச்சு எழுதி இருக்கீங்க..

வெண்ணிற இரவுகள்....! said...

நன்றி ஜெய்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Nice write up....அப்புறம் என்ன ஆச்சு? எனக்கும் இப்படி குறியீடுகளில் நம்பிக்கை உண்டு...