Friday 1 January 2010

3 idiots --- all is well
























நேற்று இரவு நண்பர்கள் அழைத்தார்கள் என்று 3 idiots படம் போயிருந்தேன். egaa திரை அரங்கில் டிக்கெட் கிடைக்கவில்லை,அதனால் woodlandsil பார்த்தேன்.படம் இந்திய கல்வி முறையை கிண்டல் செய்கிறது படம் .மனப்பாடம் பண்ணுவது,மனப்பாடம் பண்ணினால் தான் நிறைய மதிப்பெண் எடுக்க முடிகிறது.ஆசிரியர் ஆராய்ச்சி பண்ணும் மாணவனை விட மனப்பாடம் பண்ணும் மாணவனை விரும்புகிறார். அமீர் கான் கல்லூரியில் ஒரு மாணவன் ஆராய்ச்சி செய்கிறான், ஆசிரியர் அங்கீகாரம் கொடுக்காததால் தற்கொலை செய்து கொள்கிறான்.
silencer என்ற கதாபாத்திரம் மனப்பாடம் செய்து கொண்டே இருக்கிறான். ஆசிரியனிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும்மென்பதே இவன் குறிக்கோள். இந்தியாவில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இது போன்ற silencer கட்டாயம் இருப்பான். ஆசிரியனிடம் அனைத்து சக மாணவர்களையும் போட்டு தருவான் .

மாதவனுக்கு புகைப்படம் எடுப்பது என்றால் ஆர்வம்,அவர் துறை அதுவென்று அமீர் கான் சுட்டிக்காட்டுகிறார். இந்தியாவில் மருத்துவம் பொறியியல் துறை மட்டுமே மதிக்க படுகிறது. மற்ற துறைகள் மதிக்கப்படுவதில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறார்கள். காட்சி அமைப்பு ஒவ்வொன்றும் கவிதை போலவே இருக்கின்றன. மாதவன் அமிரை தவிர அவர் கூட வரும் இன்னொரு நடிகர் நன்றாய் நடிக்கிறார். பல இடங்களில் silencer மற்றும் இவர் கை தட்டு வாங்கிகிறார்கள். ஏற்கனவே மருத்துவத்துறையை தொட்ட இயக்குனர் இப்பொழுது கல்வி துறையை தொட்டு உள்ளார்.இன்னும் கிராமங்களில் மனப்பாட கல்வியே இருக்கிறது.புரிந்து யாரும் படிப்பதில்லை.machine என்பதற்கு அமீர் எளிமையாய் சொல்வார் ஆசிரியர் அவர் சரியாக சொல்ல வில்லை என்பார் சக மாணவன் definition மனப்பாடம் பண்ணி சொல்வான்,அவனை பாராட்டுவார் ஆசிரியர்...........

munnaibai படத்தில் கட்டிப்பிடி வைத்தியம் சொல்லித் தந்தவர் இந்த படத்தில் all is well என்னும் புது தத்துவம் சொல்கிறார்.......! அமீர் ஒரு பிரசவம் பார்ப்பார் குழைந்தை உயிருடன் இல்லை என்பது போல இருக்கும் .all is well என்று சொன்னவுடன் குழந்தை
கால் அசைப்பது ........munnabaai படத்தில் ரவி சார் என்ற கோமா நோயாளிக்கு செய்வதை போலவே இருந்தது.....!

இயக்குனர் மனித நேயம் உள்ளவர் என்று ஒவ்வொரு காட்சியும் சொல்கிறது. ஒரு இயக்குனர் என்பதை விட அவரை மனிதனாய் மதிக்க தோன்றுகிறது.நல்ல படங்களில் வில்லன் வருவதில்லை வில்லனின் குண நலன்கள் ஒரு ஈகோ கொண்ட ஆசிரியர் பழமைவாதி .......இது முன்னபாய் படத்தில் வரும் வில்லன் போன்ற கட்டமைப்பே.....வில்லன் கூட சக மனிதனே ..ஏன் தமிழில் உலக படம் பார்த்து படம் எடுக்கிறார்கள் ....படம் என்றால் ரத்தம் ஓட வேண்டுமா....வில்லன் என்றால் பஞ்ச் பேச வேண்டுமா என்ன?????????????

3 idiots பார்த்து வந்து all is well சொல்லத்தோன்றுகிறது .....மொத்தத்தில் film is well ........

3 members but they are not idiots

3 comments:

MyFriend said...

arumaiyaana vimarsanam nanba :-)

All izz well.. ;-)

thiyaa said...

அருமையான இடுகை வாழ்த்துகள்

ஸ்ரீராம். said...

அமீர் கான் வித்தியாசமாகத்தான் முயற்ச்சிக்கிறார்....