Wednesday 11 January 2012

நண்பன் - உழைக்கும் மக்களின் பகைவன்

இன்று "நண்பன்" படம் வெளிவருகிறது.கேரளத்தில் விஜய்க்கு ரசிகர்கள், அதிகம் முல்லைப்பெரியார் பிரச்சனையால் ஐந்து மாவட்டங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் பொழுது கூட இந்த பிள்ளை பூச்சி வாய் தரக்கவில்லை, ஏன் வாய் திறக்கவில்லை என்று நான் விளக்க தேவை இல்லை.கேரளத்தில் குறைந்தது நூறு திரைஅரங்கில் படம் வெளிவருகிரதாம். தனக்கு பிரச்சனை, தன் படம் ரிலீஸ் பிரச்சனை என்ற பொழுது அரசியலிலே வாய்ஸ் கொடுக்கும் நடிகர்கள், மக்களின் பணத்தில் வளர்ந்து குளிர் காயும் நடிகர்கள்,மக்களின் வாழ்வாதார பிரச்சனை என்றால் தெருவில் இறங்கி போராட வேண்டாம் குரல் கூட குரல் கொடுப்பதில்லை . இத்தகையவனுக்கு பால் அபிஷேகம் கட் அவுட் "என்ன கொடும சரவணன்". முன்பெல்லாம் MASS HERO படத்திற்கு முதல் நாள் செல்வதுண்டு,ரசிக மனப்பான்மையுடன் அவர்கள் அடிக்கும் விசில் சத்தம் கேட்டு பூரித்தது உண்டு,இப்பொழுது அது முட்டாள் தனம் நாம் எவ்வளவோ முட்டாளாக இருந்திருக்கிறோம் என்று தோன்றுகிறது. நீங்கள் கேட்கலாம் நடிகர் , கலைஞர் அவர்கள் வேலையை பார்க்கிறார்கள் என்று அதற்கு என் பதில் சமூக அக்கறை இல்லாதவன் நடிகனாக , ஏன் கலைங்கனாக இருக்கவே முடியாது? இவருக்கு போட்டி நடிகர் சமூக பிரச்சனை என்று வந்தால் "நான் நடிகன் எனக்கு அரசியல் தெரியாது " என்று ஒதுங்கிகொள்வார்.
இன்னொரு நடிகர் பனியன் ஜட்டி விளம்பரங்களுக்கு கூட வருவார்,உலக தமிழர்களின் வெற்றி என்று போஸ்டரில் கர்ஜிப்பார் , அப்படி கர்ஜித்த நேரம் அவர் படம் கேரளத்தில் ஓடிக்கொண்டிருந்தது,வாயை மூடி மௌனமே காத்தார் . கூலி விவசாயி போராடுகிறான் , கடைக்காரர்கள் ஒரு நாள் வியாபாரம் விட்டு போராடுகிறார்கள் , கோயம்பேட்டில் காய்கறி காரர்
போராடுகிறார்.ஆட்டோ ஓட்டுனர் போராடுகிறார்கள் , ஆனால் இந்த MASS HEROKKAL கோடியில் புரளும் ஹீரோக்கள் தயாரிப்பாளரின் நண்பனாய் , அவர் கேரளத்தில் எங்கு வணிகம் பாதிக்கப்படுமோ என்று ஒரு வார்த்தை கூறுவதில்லை . அதனால் இனி இவர்களை புறக்கணிக்க வேண்டும் , நான் புறக்கணிக்க போகிறேன்.

நண்பன் பற்றி படம் பார்க்காமலேயே என் ஒரு வரி விமர்சனம்
நண்பன் - பகைவன்

1 comment:

பாலா said...

நல்ல முடிவு முதலில் அதை செய்யுங்கள்.