Sunday 22 January 2012

நண்பன் - லக்கி லுக்கிற்கு ஒரு எதிர்வினை

"படம் பார்த்த சில நண்பர்கள் இப்படம் மிக மோசமான அரசியலை முன்வைப்பதாக சொல்கிறார்கள். ஏனோ எனக்கு அப்படி எதுவும் உறுத்தவில்லை. அல்லது அம்மாதிரி அரசியல் பார்வையோடு படம் பார்க்கத் தெரியவில்லை. மாறாக நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் தலித் மாணவர்கள் தற்கொலை செய்வதை, சிறப்பாக படம் பிடித்து காட்சியாக காட்டியதற்கு பாராட்டவே தோன்றுகிறது. ஜீவாவின் குடும்பப் பின்னணியை காட்டும் காட்சிகளில் ஏழ்மையை கேலி செய்வதாக ஒரு குற்றச்சாட்டு. போதுமான இரக்கம் கோரவில்லை என்பதைத் தவிர்த்து இதில் வேறு பிரச்சினை இருப்பதாக தோன்றவில்லை. ஏழ்மையை யதார்த்தமாக காட்டுவதாக சொல்லிக் கொள்ளும் சில படைப்புகள் மோசமான கருத்தியல் வன்முறையை உருவாக்கவல்லவை. கல்விமுறை மாறவேண்டும் என்கிற படத்தின் அடிநாதத்தில் யாருக்கும் கருத்துவேறுபாடு இருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்." இது நண்பர் லக்கி லுக் எழுதிய நண்பன் பற்றிய பதிவில் பதியப்பட்டவை.கல்விமுறை மாறவேண்டும் என்பதில் கருத்துவேறுபாடு இருக்க முடியாது உண்மை தான். ஆனால் இன்றைய
கல்வி முறை எப்படி உள்ளது.புற்றீசல் போல பொறியியல் கல்லூரிகள்,பன்னாட்டு முதலாளிகளுக்கான இயந்திரங்களை
(மனிதர்களை) குறைந்த விலையில் உற்பத்தி செய்து கொடுக்கின்றன.அதாவது ஒரு மாணவன் நன்றாக படித்து இருந்தாலும்
பொறியியல் கல்லூரியில் ஒரு செமஸ்டர் பீஸ் குறைந்தது 32000 ரூபாய்.சென்னையில் சில கல்லூரிகளில் வீடு சென்னையில் இருந்தாலுமே
லஞ்ச் அங்கே தான் சாப்பிட வேண்டும். அப்புறம் பஸ் பீஸ் இப்படி அனைத்து பீசுகளையும் கொடுத்து, தன் உழைப்பு சொந்த செலவு,
அறிவு அனைத்தையும் அடமானம் வைக்கும் இடம் பன்னாட்டு நிறுவனங்கள்.
பன்னாட்டு நிறுவனங்கள் தனக்கு தேவையான கட்டிடம் இயந்திரங்கள் இவற்றை காசு கொடுத்து வாங்குகின்றன. ஆனால் HUMAN RESOURCE எனப்படும் மனித உழைப்பை அவன் சொந்த செலவை வைத்தே வாங்குகின்றன. புற்றீசல் போல பொறியியல் கல்லூரி பெருகுவதற்கு யார் காரணம் என்று கொஞ்சம் யோசித்து பார்த்தாலே புலப்படும்.
பொறியியலை சந்தையாக உருவாக்கி, அதிக மாணவர்களை உருவாக்குகிறது முதலாளித்துவம். அதவாது ஒரு மென்பொருள் நிறுவனத்தில் மூன்றே மூன்று வேலைக்கு ஆயிரத்து ஐநூறு பேர் போட்டி போட்டால் என்ன ஆகும்,
ஒருவன் மிகத் திறமையானவனாய் இருந்தாலும் அவனால் சம்பளத்தை அதிகமாய் கேட்க முடியாது. அந்த வேலைக்கான சம்பளம் முப்பதாயிரமாய் இருக்கும் பட்சத்தில், பத்தாயிரம் தான் கொடுப்பேன் என்றால் இவன் ஒத்துக்கொள்ளவே செய்ய வேண்டும்,இவன் ஒத்துக்கொள்ளவில்லை என்றால் இவனுக்கு பின்பு ஒருவன் இருக்கிறான். ஆனால் வேலைக்கு ஆள்
எடுக்கும் அந்த நிறுவனத்தை பாருங்கள், அவர்கட்கு லாப விகிதம் அதிகமே. இப்படி வேலை கிடைக்காமல் இருக்கும் மாணவர்கள் ஒரு BPO நிறுவனத்தில் வேலை செய்வது வாடிக்கை வயிற்றின் தேவை கருதி.பன்னாட்டு முதலாளிக்கு இலவச நட் போல்ட் ஆவதற்கு புரிந்து படித்தால் என்ன புரியாமல் படித்தால் என்ன?மேலும் தனக்கு தேவையான துறையை யாரால் தேர்ந்தெடுக்க முடியும், நாட்டில் எண்பது சதவிகித மக்கள் தினம் இருபது ருபாய் சம்பாதிக்கும் தேசத்தில்(இங்கு தமிழ் நாடு முன்னேறிய மாநிலம்), ஒரு சிறுவன் விரும்பும் பட்சத்தில் அவனால் CORPERATION பள்ளிக்கு கூட செல்ல முடியாது, இப்படி உருவாகும் சிறுவர்களே சுண்டல் விற்பவர்கள் ,சூ துடைப்பவர்கள். இரண்டாவது அப்பா அம்மா படிக்கவில்லை, ஆனால் ஒரு மாணவன் DAV போன்ற பள்ளியில் படிக்க ஆசை படுகிறான் பணம் இருக்கிறது, அவ்வாசை கூட நிறைவேறாது சூழல் இங்கு இருக்கிறது. படிப்பு என்பது பணம் சார்ந்து, வர்க்கம் சார்ந்து, சாதி சார்ந்து இருக்கிறது. இப்படி இருக்கும் தேசத்தில் விருப்பதிற்க்காய் யார் படிக்க முடியும், சாதியால் வர்க்கத்தால் பாரிய அளவில் உயர்ந்தவர்களே அத்தகைய விருப்பப்பட்ட துறையை தேர்ந்தெடுக்க முடியும். ஜீவாவின் குடும்ப பின்னணியை காட்டும் பொழுது மேல் தட்டு வர்க்கம் பல் இலிக்கவில்லையா. உழைக்கும் மக்கள் உழைப்பாதால் அழுக்காய் தான் இருப்பார்கள். வெயிலில் உழைக்கும் முகம் வெள்ளையாய் இருக்க முடியுமா. அதுவும் பெண்கள் என்றாலே பொருள், அப்பொருள் கருப்பாய் இருப்பதால் அழகாய் இல்லை, அதனால் ஸ்ரீகாந்திற்கு வாந்தி வருகிறது.இப்படி மனித சமூகத்தை யாரால் இழிவாய் காட்ட முடியும். மேலும் பன்னீர் தலித்தின் குறியீடு என்று சொல்கிறார் யுவா,படத்தில் PRESSURE தாங்காமல் தான் பன்னீர் கொல்லப்படுவார்,தலித் என்ற ஒடுக்குமுறையால் அல்ல. அவர் சொன்ன உயிர்மை கட்டுரையில் கல்லூரி வளாகத்தில் சகமாணவர்கள் தலித் என்பதாய் கொடுமை படுத்தியதால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று பதியப்பட்டிருக்கும்,
படத்தில் அவ்வாரா பதியப்பட்டு இருக்கிறது நெஞ்சை தொட்டு சொல்லுங்கள். இங்கே சக மாணாவர்கள் எல்லாம் அவருக்கு ஆதரவாய் தான் இருப்பார்கள். ஸ்ரீகாந்த் அவர்கட்கு கூட இதே PRESSURE இருக்கும் , ஆனால் கம்மியாய் இருக்கும் , இங்கு இதை தலித்து என்று எப்படி நிறுவ முடியும்.
இது எல்லாம் உங்கள் கண்ணில் பட்டிருக்க தான் செய்யும், விமர்சனத்தை கதையில் இருந்து பார்க்காமல் இலியான இடுப்பு என்னும் சதையில் இருந்து பார்க்காதீர்கள் யுவா.

UYIRMAI ABOUT DALITHS
NANBAN YUVA
YUVA ABOUT SOCIALISM

7 comments:

பாலா said...

அப்போ நீங்க படம் பார்த்துட்டீங்களா? பார்க்கவில்லை என்றால், பார்க்காமேலேயே அது குறித்து நீங்கள் பேச தேவை இல்லை. பார்த்து விட்டீர்கள் என்றால் இரண்டு பதிவுகள் பின்னோக்கி சென்று நீங்கள் எழுதியதில் கடைசி வரிகளின் அர்த்தம் என்ன என்பதை பற்றி சொல்லி விடுங்களேன். பதில் கொடுப்பீர்கள் என்று நினைக்கிறேன்

வலிப்போக்கன் said...

இலியான இடுப்பு என்னும் சதையில் இருந்து மட்டும் பார்க்கவில்லை
அதையும் தாண்டி வேறு பார்வை இருக்கிறது.

வெண்ணிற இரவுகள்....! said...

நண்பரே நான் ஏற்க்கனவே ஹிந்தி பதிப்பு பார்த்து விட்டேன்.தமிழில் அச்சு பிசங்கமால் இருக்கிறது என்பதை கேள்விப்பட்டேன்.
நான் எந்த காரணதிலும் விஜய் இப்படி நடித்துள்ளார் , ஜீவா இப்படி நடித்துள்ளார் என்பதை பற்றி சொல்லவே இல்லை. லக்கி
பதிவிற்கு ஒரு விமர்சனம் அவ்வளவே. இது படத்தை பற்றி விமர்சனம் அல்ல.

rajamelaiyur said...

இது உண்மையாக நடந்தது ..

நண்பன் படமும் அஜித் ரசிகர்களும்

பாலா said...

நீங்கள் சொல்வதை உண்மை என்றே நம்புகிறேன். அப்படியானால் கேள்விப்பட்டதை வைத்து ஒரு கருத்தை தெரிவித்திருக்கிறீர்கள். ஹிந்தி பதிப்பில் தற்கொலை செய்துகொள்ளும் மாணவன் கருப்பாகவா இருப்பான்? அவனது தங்கை கருப்பாகவா இருப்பாள்?

உங்கள் பதிவு நெடுகிலும் தமிழில் வரும் கதாப்பாத்திரங்களின் பெயர் வருகிறது. அதை வைத்தே சொன்னேன். அப்புறம் ஸ்ரீகாந்த் வாந்தி எல்லாம் எடுக்க மாட்டார். திரு திருவேன விழிப்பார். இது எந்த வயசுப் பையனும் கொடுக்க கூடிய ரீயாக்ஷன்தான். அதனால்தான் சொன்னேன் படம் பார்க்காமல் கருத்து கூறாதீர்கள் என்று.

//சாதியால் வர்க்கத்தால் பாரிய அளவில் உயர்ந்தவர்களே அத்தகைய விருப்பப்பட்ட துறையை தேர்ந்தெடுக்க முடியும்

நீங்கள் எந்த சாதியை பற்றி கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை. என் நண்பன் ஒருவன், அவனது தந்தை டீ கடையில் வேலை பார்ப்பவர். அவனுக்கு படிப்பு மட்டுமே துணை. அவன் அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து தேர்ச்சி பெற்று தற்போது நோக்கியாவில் வேலை பார்த்து வருகிறான். அவன் காண்வெண்டில் எல்லாம் படிக்கவில்லை.

பாலா said...

அரசு பொறியியல் கல்லூரிகளில் கட்டணம் குறைவுதான் என்பதை நினைவில் கொள்க. மேலும் அங்கே தங்கும் விடுதி, உணவு செலவுகளும் குறைவுதான்.

சம்பளத்தை அதிகமாக கேட்கமுடியாது என்ற நிலை முன்பு இல்லை. அந்த சமயத்தில்தான் புற்றீசல் போல கல்லூரிகள் வரத்தொடங்கின. ஆனால் தற்போது அந்த நிலை வந்து விட்டது. இது அதிகரிக்கும் பட்சத்தில், பொறியியல் கல்லூரிகள் கவர்ச்சியை இழக்க தொடங்கும். இப்போதே பெரும்பாலான கல்லூரிகளில் காத்தாடுகிறது.

சீனிவாசன் said...

ஹிந்தி பதிப்பில் நீங்கள் சொல்வது போல மாணவனுக்கு கிடைக்கும் அதிகப்படியான மன அழுத்தமே அம்மாணவனின் தற்கொலைக்கு காரணம், அவன் தலித் என்பதல்ல! கல்வி என்பது இல்லாதவர்க்கு எட்டாக்கனியாகும் இந்த சூழலில் நாம் பேசவேண்டியது கல்விமுறையை குறித்தா அல்லது கல்வி தனியார்மயமாவதை குறித்தா? மேலும் அவரவர்க்கு விருப்பமான துறையை தேர்ந்தெடுப்பது அவ்வளவு எளிதான ஒன்றல்ல, ஏனெனில் தற்போதைய சூழலில் கல்வியென்பது மக்களின் மனதில் பிழைப்புக்கான வழியாகி பல காலமாகிறது. இதில் எதற்க்கு சந்தையில் மதிப்பிருக்கிறதோ அதை நோக்கித்தான் மக்கள் கூட்டம் செல்லும்!