Friday 5 February 2010

மூன்று குரங்குகள்








எந்திரிக்கிறேன் எந்திரமாய்,
சமூக கோபம் இருக்கிறது ,
படம் பார்க்கும் நீட்சியாய் நீர்த்துபோகிறது கோபம்,
சாமி கும்பிடும் நீட்சியாய் நீர்த்துபோகிறது கோபம்,
காதலிக்கும் நீட்சியாய் நீர்த்துபோகிறது கோபம்,
நல்லதை மட்டுமே பார் என்பதால் நீர்த்துபோகிறது கோபம்,
நல்லதை பார்
நல்லதை கேள்
நல்லதை பேசு
என்னும் குரங்கு .............
என்னிடம் சொல்கிறது கெட்டதை கண்டுக்காதேனு...

3 comments:

சிவாஜி சங்கர் said...

:)........ :)

sathishsangkavi.blogspot.com said...

//நல்லதை பார்
நல்லதை கேள்
நல்லதை பேசு//

எல்லோரும் இப்படி இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை நண்பா....

GoodJob said...

இது கண்டிப்பாய் இந்திய அரசியல்வாதி குரங்குதான்
" ஈழ படுகொலையை பார்க்காதே
ஈழத்துக்கு ஆதரவாய் குரல் கொடுக்காதே
ஈழத்தில் இருந்து வரும் அலறலை கேட்காதே "