Thursday 22 July 2010

பேருந்திலும் மழை பெய்யும்























சில தருணங்கள்
வாழ்வை புரட்டி போடும் ,
சில பயணங்கள்
நம்முடன் பயணம் செய்யும் ,
ஏதோ ஒரு பேருந்தில்
யாரையோ சந்திக்க போக ,
விழிகள் சந்தித்தேன்
அதே பேருந்தில்
சில நாட்கள்
தூரப்பார்வை ,
சில நாட்கள் கிட்டப்பார்வை
பக்கத்து பக்கத்து இருக்காய்
என்று பரிணாம வளர்ச்சி அடைந்தது காதல் ,
காதல் பிரிந்த நாட்களில்
நீ ஒரு ரயிலிலும்
நான் மற்றொரு பேருந்திலும்
பயணத்திலும் காதல் பயணத்தை பிரித்தோம் ,
மாநகர பேருந்தில்
ஏதோ ஒரு பையன்
யாரோ ஒரு பெண்ணை பார்த்துக்கொண்டிருக்கிறான் .
எனக்கு ஏனோ பதறுகிறது

2 comments:

'பரிவை' சே.குமார் said...

//மாநகர பேருந்தில்
ஏதோ ஒரு பையன்
யாரோ ஒரு பெண்ணை பார்த்துக்கொண்டிருக்கிறான் .
எனக்கு ஏனோ பதறுகிறது //

நல்ல கவிதை.

Madurai Ramakrishnan said...

valga