Friday 30 July 2010

போராட்டமே மகிழ்ச்சி

"பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்
"பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள் " என்னும் தலைப்பில் ராதாகிருஷ்ணன் ஐயா அவர்களின் பதிவை படித்தேன் . அவர் பதிவு யாரும் பிரச்சனைகளை பற்றி எழுதாதீர்கள் ஒதுங்கி போங்கள் என்று சொல்லும் விதமாய் இருந்தது . அதாவது போராடாமல் இருப்பது தான் மகிழ்ச்சி என்பது போல் கட்டுரை இருந்தது . எதில் போராட்டம் இல்லை , ஒரு தாய் பிரசவிக்கும் பொழுதே வலியுடன் தான் குழந்தையை பிரசவிக்கிறாள் . நம் போராட்டம்
பிறந்ததில் இருந்தே தொடங்குகிறது . ஒரு குழந்தை போராடி போராடி தான் நடையை கற்றுக்கொள்கிறது . கீழே விழுவோம் என்று நினைத்தால் நடக்காமல் இருந்து விடும் தானே . பள்ளிக்கு செல்கிறோம் ஒரு தேர்வில் தோல்வி அடைகிறோம் , போராடி படிக்கிறோம் , நாம் என்று வரும்பொழுது , நமக்கு என்று வரும்பொழுது போரடிகிறோம் .
ஆனால் இதே விடயம் சமூக பிரச்சனை என்றால் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கி கொள்ளும் போக்கு உள்ளது . சிலர் ஒதுங்கிக்கொண்டு போவது உண்டு , சிலர் உங்களுக்கு எதற்கு வீண் வேலை என்று செல்லும் ஒன்று இரண்டு பேரையும் தடுப்பது உண்டு . சிலர் ரஷ்யாவிலே ஏன் தோற்றனர் சீனாவில் லட்சணம் தெரிகிறதே என்று ஏளனம் செய்வது உண்டு . அவர்களுக்கு எல்லாம் ஒரு கேள்வி நீங்கள் ஒரு INTERVIEW செல்கிறீர்கள் வேலை கிடைக்கவில்லை , உங்கள் முயற்சியை விடுவீர்களா ? உங்களுக்கு என்று வரும்பொழுது
முயற்சி , சமூகம் என்று வந்தால் அது எல்லாம் முடியாது வெட்டி வேலை என்று சொல்கிறீர்கள் . ராதாகிருஷ்ணன் ஐயாவிற்கு இன்று வினவு தளத்தில் வந்த "மகிழ்ச்சியின் தருணங்கள் " சமர்ப்பணம் . போராட்டத்திலே மகிழ்ச்சி உண்டு மார்க்ஸ் சொன்னது எவ்வளவு உண்மை.

"மகிழ்ச்சியின் தருணங்கள் "

1 comment:

Anonymous said...

//அவர் பதிவு யாரும் பிரச்சனைகளை பற்றி எழுதாதீர்கள் ஒதுங்கி போங்கள் என்று சொல்லும் விதமாய் இருந்தது.//

நடுத்தரவர்க்கத்தின் இயல்பு இது. அது இப்படித்தான் சிந்திக்கும்.