Thursday 1 July 2010

தாலி
















ஊரில்
பொங்கல் வைத்தார்கள்
என்பதற்காய் நான் திருவிழாக்கள் என்று
சொல்லவில்லை .........!!!!!!
திருவிழா என்பது நான் சாமி பார்க்கும்
விழா அல்ல ......
நீ என்னை பார்க்கும் விழா ...... !!!!
நீ என்னை பார்த்த நாள் முதல்
அது திருவிழா என்று ஏற்றுக்கொண்டேன் ....!
காதல் பாடல்கள் ஒலி பெருக்கியில்
பாடிக்கொண்டிருந்த பொழுது ..............
நாம் யார் காதில் விழாமல் பேசிக்கொண்டோம் ...!
பாடல்கள் போடாத நொடிகளில்
பார்வைகளால் பேசிக்கொண்டோம் ............!!!!!
எதோ ஒரு தினத்தில் உனக்கு பரிசம்
போட்டார்கள் ...............வேறு ஒருவனுடன்
திருமண தினத்தன்று
ஒலி பெருக்கி அலறிக்கொண்டிருந்தது ...........
ஆனால் நானும் பேசவில்லை நீயும்
பேசவில்லை ............!!!!
ஏதொ வேறு சாதியாம்
தாலியாம் ..............
தாலி ஏறிவிட்டால் நீ சொத்தாம்
யாரையும் பார்க்க கூடாதாம் ....................!!!!
அன்று நம் பார்வையும் பேசவில்லை
குனிந்து கொண்டே இருந்தாய் ..................
குனிந்த சமூகத்தில்
பெண் குனிந்து தானே இருக்க முடியும் .........
ஏன் மணமகன் மெட்டி போடவில்லை
மணமகன் தாலி கட்டக்கூடதா ....................
மணமகன் நண்பர்களுடன் சேர்ந்து
சரக்கடித்தானாம் பழைய காதலியை
நினைத்து
ஏன் நீ சரக்கடிக்கவில்லையா ??????
உனக்கும் காதல் தோல்வி தானே ....
ஒ பெண்களுக்கு வலி இல்லையோ
சரக்கடித்தால் உன்னை பெண்
என்று ஒத்துக்கொள்ள மாட்டார்களோ ..........
யார் இந்த சட்டம் எல்லாம்
போட்டது ..............!!!!!

2 comments:

வெண்ணிற இரவுகள்....! said...

ஆணாதிக்கத்தை எதிர்க்கும் பின்னூட்டங்களை எதிர்ப்பார்க்கிறேன்

மதுரை சரவணன் said...

நீ என்னை பார்த்த நாள் முதல்
அது திருவிழா என்று ஏற்றுக்கொண்டேன் ....!// arumai.வாழ்த்துக்கள்