Sunday 11 July 2010

இந்தியனின் உயிரின் விலை மூன்று ரூபாய் - போபால் உணர்த்தும் உண்மை
















போபால் விடயத்தை முதலில் நான் எழுதிய பொழுது எனிடம் கேட்க பட்ட கேள்விகள் , "ஓட்டுனர் விபத்தை ஏற்ப்படுத்தினால் எப்படி வண்டிக்கு சொந்தக்காரரை கைது செய்ய முடியும் ", அதனால் அன்டேர்சன் குற்றமற்றவர் என்று விவாதம் .சரி அந்த விடயத்தை கொஞ்சம் விவரமாய் புரிந்து கொள்வோம் . மெத்தில் ஐசோ சயனைடு என்ற திரவம் வெளியில் லீக் ஆகி விஷ வாயுவை கக்கியது . இந்த மூல பொருளை வைத்து தான் "செவின்" என்ற பூச்சி கொல்லி மருந்து தயாரிக்க படுகிறது . ஐசோ சயனைடு விஷத்தை கக்கும் என்பதால் இதே பொருள் அமெரிக்காவில் வேறு ஒரு சூத்திரத்தில் அதவது மெத்தில் ஐசோ சயனைடு உபயோகப்படுத்தாமல் இதே மருந்தை தயார் செய்ய முடியும் . ஆனால் மெத்தில் ஐசோ சயனைடு செலவு கம்மி , அதிக லாப வெறி கொண்ட முதலாளியின் நோக்கம் தான் போபால் படுகொலை . முதலில் 1969 முதல் 1975 வரை இதற்க்கு அனுமதி மறுக்க பட்டுள்ளது ஏன் எனில் இது பழைய தொழிற்நுட்பம் மற்றும் இதன் மூலம் ஏற்படும் விபரீதங்களும் பயங்கரமாய் இருக்கும் என்பதால் முதலில் அமைச்சகம் இதற்க்குஎதிர்ப்பு தெரிவித்து உள்ளது , 1975 ஆண்டே அதற்க்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது .

மெத்தில் ஐசோ சயனைடை அதிகமாய் கலங்களில் சேர்த்து வைப்பது ஆபத்து , விபத்து நடந்த அன்று அதிகமாய் தான் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது . மேலும் ஒரு கலன் வெப்பம் கூடினால் மற்றொரு கலனுக்கு மாற்றி , அதன் வெப்பத்தை மட்டுப்படுத்த வேண்டும் , இந்த முறை தான் அமெரிக்காவில் இதே UNION CARBIDE நிறுவனத்தில் உள்ளது ஆனால் இந்தியாவில் அதற்க்கான வழி இல்லாமல் இருக்கிறது கட்டமைப்பு . மேலும் குளிரூட்டப்பட்ட
நிலையிலேயே இருக்க வேண்டும் ஆனால் செலவின் காரணமாய் குளிர்சாதனத்தை போடாமல் இருந்து இருக்கிறது நிர்வாகம் . இதை எல்லாம் செய்து விட்டு அன்டேர்சன் குற்றவாளி அல்ல தொழிலாளர்கள் செய்த தவறே காரணம் என்று கூச்சம் இல்லாமல் சொல்கிறார்கள் .

அமெரிக்காவில் நான்கு அடுக்கு பாதுகாப்பில் இருக்கும் தொழிற்சாலை இங்கே இல்லை அதே தொழிற்சாலை பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது முதலாளியின் லாப நோக்கத்திற்காக . அமெரிக்காவில் இதை போல் செய்து விட்டு சும்மா போக முடியுமா என்ன ???? பிரிட்டிஷ் பெற்றோலியம் இதை போல ஒரு விபத்துசெய்தது அமெரிக்காவில் இழப்பு என்னமோ கம்மி தான் 12 பேர் , சில மீன்கள் இறந்தன , அதற்க்கு 2000 கோடி டாலர்கள் நிவாரணம்
ஆனால் இங்கே இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் , லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் இங்கே இழப்பீடு இருபத்தி ஐந்து வருடத்திற்கு பிறகு 47 கோடி டாலர் , அதாவது அமெரிக்காவில் வாழும் கடல் நாய் , மற்றும் மீன்களை விட மனித உயிர்கள் மயிர்களை போன்றது என்கிற மனோபாவமே .

பாராளுமன்றத்தில் அணுசக்தி மசோதா ஒன்று வரப்போகிறது ,அதை போபால் விடயத்தின் பொழுது வந்தால் எதிர்ப்பு கிளம்பும் என்று தள்ளி வைத்து உள்ளனர் . அதன் சாராம்சம் எவ்வளவு தான் மக்கள் செத்தாலும் , இனிமேல் இதை போல விபத்து நடந்தால் முன்னூறு கூடி மட்டுமே இழப்பீடு தரவேண்டும் . அதாவது இந்தியாவில் இருக்கும் 100 கோடி மக்களின் உயிரின் விலை 300 கோடி , ஒரு உயிரின் விலை மூன்று ரூபாய். எவ்வளவு கொடுமை . அதாவது நீங்கள் என்ன வேண்டுமானாலும் அடியுங்கள் , எங்கள் முதுகு காத்து கிடக்கிறது , என்று இந்தியா முதுகை திரும்பி காண்பிக்கிறது , இது வெளி நாட்டில் இருக்கும்முதலாளிகளை ஈர்க்கும் என்கிறார்கள் . தனியார்மயம் , உலகமயம் என்று சொல்பவர்களின் மூஞ்சியில் சேர் , கரி பூசப்பட்டுள்ளது . அதாவது பல லட்சம் உயிர்களின் மதிப்பை விட ஒரு முதலாளியின் லாபம் முக்கியமானது என்கிறது .

மேலும் இதை போல ஒரு நிறுவனம் பேரழிவை ஏற்ப்படுத்தினால் 30 வருடம் வரை அந்த மக்களுக்கு நிறுவனமே பொறுப்பு , அந்த பொறுப்பை முப்பது முதல் பத்து வருடமாய் குறைக்கிறது மசோதா . சட்டங்கள் ஆளும் வர்கத்திற்க்கு , ஜனநாயகம் ஆளும் வர்கத்திற்க்கு . இன்று போபால் நாளை சென்னை அல்லது மதுரை ?????? பல போபல்கள் வெடித்து கொண்டிருக்கின்றன , போபால் உலகமயத்தின் trailor மட்டுமே , இன்னும் அதன் கொடுராமான படம் ஆரம்பிக்கவில்லை .
நண்பன் புல்கேசியின் படிக்க வேண்டிய பதிவு


http://pulavanpulikesi.blogspot.com/2010/07/1.html

13 comments:

புலவன் புலிகேசி said...

தனக்கு நேரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்றிருக்கும் மக்கள் மாற்றப் பட வேண்டும்.அப்படி மாறாமல் இருந்தால் நாம் அனைவரும் அழிந்து போக வேண்டியதுதான். நல்ல பதிவு.

வெண்ணிற இரவுகள்....! said...

மக்கள் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இன்று போபால் , நாளை நம் ஊராக கூட இருக்கலாம்
நம் தலை மீதும் கத்தி உள்ளது உலகமயமாக்கலின் சக்தி இது தான்

வெண்ணிற இரவுகள்....! said...

விவாதங்கள் இருந்தால் சரியாக இருக்கும்

இனியாள் said...

சில நிஜங்கள் வலி நிறைந்ததாக இருக்கிறது. இதையெல்லாம் மாற்ற நாம் நம் அளவில் என்ன செய்ய போகிறோம் என்ற பெரிய கேள்வி எழுகிறது.

வெண்ணிற இரவுகள்....! said...

மனித சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் ,அப்படி புரியும் பொழுது ஒன்று கூடி எதிர்க்க வேண்டும் இனியாள்

ஏழர said...

அருமை கார்த்தி.. அப்படியே புலிகேசியின் பதிவுக்கும் இணைப்பு கொடுக்கவும். இந்தியாவில் இன்னும் பல போபால்களை உருவாக்க திட்டமிடும் அநியாத்துக்கு எதிராக பதிவர்கள் குரல் ஓங்கட்டும்

வெண்ணிற இரவுகள்....! said...

இணைப்பு கொடுத்தாச்சு எழர

வெண்ணிற இரவுகள்....! said...

இதை போன்ற விடயங்களில் விவாதம் தேவை

வெண்ணிற இரவுகள்....! said...

விவாதிக்க வாருங்கள் நாட்டை உலுக்கும் விடயம் இது

வெண்ணிற இரவுகள்....! said...

விவாதிக்க வாருங்கள் நாட்டை உலுக்கும் விடயம் இது

அன்பரசு said...

இது வெளிநாட்டு முதலாளிகளை கவர அல்ல, நம் அரசியல்வாதிகளின்
சுயநலம், வேதாந்தா நிறுவனத்தின் இயக்குனராய் இருந்த சிதம்பரம் அவர்களுக்காக இன்று நம் மக்களை கொல்கிறார். நாம் வாக்கினை செலுத்தாவிடினும் எந்திரத்தின் துணையுடன் வென்று அரசியல் செய்கிறார், என்ன கொடுமை?

Unknown said...

என்ன இந்தியாவில் ஒரு உயிரின் விலை மூன்று ருபாயா? இதற்கும் விலைஉயர்வா ?

ரதியழகன் said...

"ஓட்டுனர் விபத்தை ஏற்ப்படுத்தினால் எப்படி வண்டிக்கு சொந்தக்காரரை கைது செய்ய முடியும் "

இவ்விடத்தில் தவறு ஓட்டுனர் மீது அல்ல வண்டியின் மீதே தவறு உள்ளது. பழுது நிறைந்த வண்டியை உபயோகபடுத்தும் வண்டியின் சொந்தகாரர் மீதும் தவறு உள்ளது.

இப்போது சொல்லுங்கள் யாரை கைது செய்யலாம்.

பின்குறிப்பு: வண்டியை உபயோகபடுத்த உரிமை கொடுத்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கபடவேண்டும்.